தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டு ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து தமிழரோடு தமிழராய் ஒன்றி வாழ்பவர்கள் ரெட்டியார் சமூக மக்கள்.
தமிழ் ஆங்கில அகராதி ரெட்டி என்னும் தெலுங்கு பழங்குடியினர் என்றும், கழகத் தமிழ், அகராதி ‘ரட்டி’ என்றும் குலம் என்றும் ‘ரட்டு’ என்பது ஒரு ஜாதி என்றும் கூறுகிறது.
ரெட்டிகளை குறிக்கும் ‘காபு’ என்ற தெலுங்கு சொல்லிற்கு மண்னுயிர் காக்கும் காவலர்கள், உழவர்கள், மன்னர்கள் என்று பொருள் கூறுகிறது. தலைவன், தளபதி, நாட்டாண்மை எனவும் பொருள் உண்டு. ரெட்டி என்ற சொல் பல நூற்றாண்டு கால வளர்ச்சி, மாற்றத்திற்கு பின் ரெட்டியார்கள் என மாறி உள்ளது. ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் பலவகை ரெட்டிகள் உள்ளதாக தெலுங்கு கல்வெட்டுகளில் காணப்படுகிறது.